Friday 13 February 2015

ரெயினீஸ் ஐயர் தெரு

ரெயினீஸ் ஐயர் தெரு

வண்ணநிலவனின் நாவல்களில் அதிகமும் கிறிஸ்தவர்களின் வாழ்க்கையைப் பின்னணியாகக் கொண்டதாய் இருக்கும். அவர் கிறிஸ்துவர் இல்லை என்றாலும் அவர்களோடு நெருக்கமான பழக்கம் இருந்ததாலும், கிறிஸ்துவ சூழ்நிலையில் வசிக்க நேர்ந்ததாலும் அவர்களது வாழ்வை ஈடுபாட்டோடு அவர் எழுதநேர்ந்திருக்கலாம். 'கடல்புரத்தில்' நாவலில் கிறிஸ்தவ மீனவர்களின் வாழ்க்கை அசலாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த 'ரெயினீஸ் ஐயர் தெரு' நாவலும் கிறிஸ்தவர்கள் வாழும் தெருவில் உள்ள மக்களைப் பற்றியதாகும். 'ரெயினீஸ் ஐயர்' என்பவரது கல்லறையை ஒட்டிய, அவர் பெயரால் வழங்கும் ஒரு சின்னத் தெருவில் உள்ள - இரு புறமும்
எதிரெதிரே அமைந்துள்ள ஆறே வீடுக¨ளைக் களமாகக் கொண்ட நாவல் இது. இவ்வீடுகளில் வாழும் எளிய மனிதர்களைப் பாத்திரங்களாக்கி பிரமிப்பைத் தரும் படைப்பை உருவாகியுள்ளார் வண்ணநிலவன்.

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/reyinees-iyer-theru.htm

No comments:

Post a Comment