"பொம்மை' இதழில் ஜூலை 1971 முதல் செப்டம்பர் 1972 வரை மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். எழுதிய மிகச் சிறப்பான தொடர் "திரை கடலோடித் திரைப்படம் எடுத்தோம்'. சினிமா ரசிகர்களிடையே மிகப் பரவலான கவனத்தையும், வரவேற்பையும் பெற்ற இத்தொடரை தொகுத்து "எம்.ஜி.ஆர். எழுதிய உலகம் சுற்றும் வாலிபன் உருவான கதை' என்னும் பெயரில் புத்தகமாக கொண்டு வந்திருக்கிறது விஜயா பப்ளிகேஷன்ஸ்.
""ஆசை, நம்பிக்கை இந்த இரண்டுக்கும் உள்ள தொடர்பும், உறவும்தான் எத்தனை வலிமை பொருந்தியது தெரியுமா? எத்தனை எமன்கள் வந்தாலும், மனித எதிரிகளே வந்தாலும், தோல்விகள் தொடர்ந்து வந்தாலும், இந்த இரண்டும் பிரிவதோ, இவைகளைப் பிரிக்க முயலுவதோ இயலாத காரியம். என்னுடைய வெற்றிகள் என்று எவையேனும் இருந்திருக்குமாயின், அதற்கு எனது தோல்வியினால் நான் தெளிவு பெற உதவிய, நியாயமான முடிவுதான் காரணம் என்பதைத் துணிவோடு, ஆதாரத்தோடு என்னால் கூற முடியும்.
மனிதனாக இவ்வுலகில் ஒருமுறைதான் பிறக்கின்றோம். இந்தப் பிறவியில், இறைவன் படைத்த உலகை முழுவதுமாகப் பார்த்து, ரசிப்பது என்பது எல்லோருக்கும் இயலாத காரியம். உலகத்தைச் சுற்றிப் பார்க்க எனக்குக் கிடைத்த இந்த வாய்ப்பை, இறைவன் கொடுத்த நல்ல வாய்ப்பாகவே கருதுகிறேன்'' என்று எம்.ஜி.ஆர்., வெளிநாடுகளில் "உலகம் சுற்றும் வாலிபன்' படத்திற்கான படப்பிடிப்பை நடத்தியபோது ஏற்பட்ட அனுபவங்களையும், சுவையான சம்பவங்களையும் மிக விரிவாக எழுதியுள்ளதை, விவரிக்கிறது இப்புத்தகம். சினிமா ஆர்வலர்கள் படித்து பயன் பெறலாம்.
எம்.ஜி.ஆர். எழுதிய "உலகம் சுற்றும் வாலிபன்'
உருவான கதை
தொகுப்பாசிரியர்: வி.வீரபத்திரன்
இணையத்தில் வாங்க:
http://www.udumalai.com/m-g-r-eluthiya-ulagam-sutrum-valiban-uruvana-kathai.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42
இணையத்தில் வாங்க:
http://www.udumalai.com/m-g-r-eluthiya-ulagam-sutrum-valiban-uruvana-kathai.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42
No comments:
Post a Comment